மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் ரஜினிகாந்த், விரைவில் கட்சி தொடங்க உள்ளார். அதற்கு வசதியாக தற்போது தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.
மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்த கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 65 ஆயிரத்து 500 குக்கிராமங்களிலும் மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட இருக்கிறது.
உறுப்பினர்களை சேர்ப்பது, அந்தந்த பகுதியில் உள்ள பிரச்னைகளை தலைமைக்கு தெரிவிப்பது. தனி நபர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வது ஆகியவை மக்கள் மன்ற கிளை நிர்வாகிகளின் முக்கிய பணிகளாகும்.
தமிழ்நாடு முழுவதும் 65500 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்த பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.