‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, அடுத்தடுத்து வெளியிட்டு வரும் தகவல்களால் அதிர்ந்து போய் கிடக்கிறது தெலுங்கு திரையுலகம். மிகவும் கண்ணியமானவர்களாக பார்க்கப்பட்ட முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை போட்டோ ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பல முன்னணி நடிகைகள் முன்வந்துள்ளனர். நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, ஸ்ருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்டோர் ஸ்ரீரெட்டிக்கு ஆதராவக களத்தில் இறங்கி உள்ளனர்.
இவர்கள் நேற்று ஐதராபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பல நடிகைகள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி விவரித்தபோது கதறி அழுதனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.
80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.