ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் தேஜா இயக்கத்தில் தயாராகும் என்டிஆ¡¢ன் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2019ம் ஆண்டு சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. மேலும், இந்த படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க இந்தி நடிகை வித்யாபாலனை அணுகினர். அதோடு, கெஸ்ட் ரோலாவே இடம்பெற்றிருந்த பசவதாரகம் வேடத்தை வித்யாபாலனுக்காக பெரிய கேரக்டராகவும் மாற்றினர். ஆனபோதும் கதை கேட்ட அவர் இதுவரை அப்படத்தில் நடிப்பது குறித்து சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பில்தான் வித்யாபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். ஒருவேளை அப்போதுவரை அவர் என்டிஆர் படத்தில் தான் நடிப்பது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்தால், ரம்யாகிருஷ்ணன் போன்ற சீனியர் நடிகைகள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.