மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் வீட்டுக்கு அதிகாலையில் வந்த மணலி போலீசார், திடுமென அவரை குண்டு கட்டாக மணலி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பிரபல பைனான்சியர் குந்தஷா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயிக்கிற குதிரை என்ற படம் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் பணத்தை, சக்தி சிதம்பரம் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக, அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்த பிரச்னையை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலிடம் கொண்டு சென்றனர். ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், போலீஸ் இதில் எப்படி தலையிடலாம் என்று மட்டும் கேட்டவர், மேற்கொண்டு, சக்தி சிதம்பரத்துக்காக எதையுமே செய்யவில்லை. இதனால், விஷால் மீது கோபம் கொண்ட சக்தி சிதம்பரம் ஆதரவாளர்கள், பிரச்னையை, விஷாலுக்கு எதிர்ப்பாக இருக்கும் நடிகர் ரித்திஷுக்கு பிரச்னையை கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அவர், இந்த பிரச்னையை கையில் எடுத்து, விஷாலுக்கு குடைச்சல் கொடுக்க துவங்கி உள்ளார்.