ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன்-சூரியின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானதைத் தொடர்ந்து அந்த படங்களை இயக்கிய பொன்ராம், தற்போது தான் இயக்கி வரும் சீமராஜா படத்திலும் அவர்களை இணைத்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றது. அதற்காக கிராமத்து செட் அமைத்து படமாக்கினார். மேலும், அங்கு மாதக்கணக்கில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் சிவகார்த்திகேயன்-சூரி இருவரும் கிரிக்கெட் டீம் உருவாக்கி விளையாடி வந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஒரு அணியாகவும், சூரி இன்னொரு அணியாகவும் விளையாடி வந்த இந்த கிரிக்கெட் விளையாட்டில் சீமராஜா படக்குழுவில் உள்ள பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். தனக்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் விளையாடுவதை அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தாராம்.