மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் சிலமாத முயற்சிக்குப் பிறகு விஜய் டிவியில் தயாராக இருந்த ராஜா ராணி சீரியலில் நடிக்க அழைப்பு வர அதில் செம்பா என்ற கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஆலியா மானசா நடித்த அந்த வேடம் இப்போது அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு சினிமாவில் இருந்தும் சில வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஆலியா மானசா, ஜூலியும் 4 பேரும் படத்திற்கு பிறகு சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் உயரத்தை குறிப்பிட்டு வாய்ப்பு தர மறுத்தார்கள், அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறைந்து விட்டது.
அதேசமயம், சின்னத்திரை என்னை கொண்டாடுகிறது. சின்னத்திரையாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப பெரிய திரையாகவே கருதுகிறேன். தொடர்ந்து சின்னத்திரையில் நீடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆலியா மானசா.