‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி, பாகுபலி-2 என்ற இரண்டு மெகா படங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபல இயக்குனராகி விட்டார் ராஜமவுலி. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
பாகுபலி-2விற்கு பிறகு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால் தற்போது பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.
இந்தப்படத்தில், ராக்ஷி கண்ணா ஒரு ஹீரோயினாக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், சமந்தாவும் இன்னொரு நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா. அந்த படத்திற்கு பிறகு தான் தெலுங்கில் சமந்தாவின் மார்க்கெட் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.