‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர் மகன் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளரை தாண்டி தற்போது தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். தெலுங்கில் வெளிவந்த பியார் பிரேம காதல் படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஹரீஷ், ரைஸா நடிக்கிறார்கள்.
அடுத்து, யுவன், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன்தான் இசை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜாவும், கார்த்திக்ராஜாவும் இணைந்து இசை அமைப்பார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா பின்னணி இசையும், கார்த்திக் ராஜா பாடல்களுக்கும் இசை அமைப்பார்கள் என்று தெரிகிறது.
இதுகுறித்து யுவன் கூறியிருப்பதாவது : மாமனிதர் மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இந்திய அரசு பத்மவிபூஷண் விருது அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் எங்கள் படத்துக்கு இசையமைக்கிறார் என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். அவர் படத்துக்குள் வந்தது தான் மாமனிதன் தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. அவரின் மகன் என்பதை தாண்டி அவரின் ரசிகன் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். இசை என்ற கலையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதும், அவரின் மகனாக அவரது நெருங்கிய வட்டத்துக்குள் இருந்து கற்றுக் கொண்டதும் எனக்கு பெருமை. இப்போது ஒரு தயாரிப்பாளராக அவரை என் படத்துக்கு ஒப்பந்தம் செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
அவரோடும், என் அண்ணன் கார்த்திக் ராஜாவுடனும் இணைந்து இசையமைப்பது என் இசைப்பயணத்தை அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றி இருக்கிறது. என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
சீனு ராமசாமியின் படங்களில் வைரமுத்து பாடல்கள் எழுதுவார். தற்போது இளையராஜா இசை அமைப்பதால் இந்தப் படத்துக்கு அவர் பாடல் எழுதுவாரா? அதற்கு இளையராஜா ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக்குறி?