ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து கடந்த சங்கராந்திக்கு வெளியான படம் ஜெய்சிம்ஹா. நயன்தாரா நாயகியாக நடித்த இந்த படத்தில் ஹரிப்பிரியா, நடாஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆந்திரா, தெலுங்கானா தவிர்த்து, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்ட இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்து, ரூ.50 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.
இதை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜெய்சிம்ஹா படக்குழுவினர் மட்டுமின்றி தனது நட்பு வட்டார நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சியின்போது, தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்டு மாதம் தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.