‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். மேலும், துப்பாக்கியில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். தற்போது இயக்கும் விஜய் 62வது படத்திலும் அவர் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார்.
ஆனால், இந்த படத்தில் விவசாயிகளின் பிரச்னை மட்டுமின்றி, உலக மக்களுக்கே உணவு கொடுக்கும் விவசாயிகள், அவர்களுக்கே தெரியாமல் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் விசத்தன்மை வாய்ந்த உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் ஒரு விசயத்தை சொல்லப் போகிறார்களாம்.
அதாவது, சமீபகாலமாக ரசாயன உரம், நவீன மருந்துகள் என்கிற அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அளவுக்கதிகமாக பயிர்களில் தெளிக்கப்படுகிறது. இதனால் பயிர் செய்யப்படும் உணவு பொருட்கள் விசத்தன்மை வாய்ந்ததாகவும், ஆரோக்கியமில்லாமலும் உற்படுத்தி செய்யப்படுகிறது.
இந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளும் மனிதன் எந்தெந்த வகையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான். இதனால் எதிர்கால சந்ததியின் நிலை என்னவாகும் என்கிற ரீதியில் ஒரு கதையை சமூகத்துக்கு அழுத்தமாக பதிவு செய்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. அதன்பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோல்கட்டாவில் நடைபெற உள்ளது.