‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அனுஷ்காவின் கேரியரில் அருந்ததி, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி, பாகுபலி-2 ஆகியவை மிக முக்கியமான படங்கள். அந்த வரிசையில், இப்போது பாகமதியும் இணைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஜனவரி 26-ந்தேதி வெளியாகயிருக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அனுஷ்கா, இயக்குனர் அசோக், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதற்கு முன்பு பிரபாஸ்-அனுஷ்கா நடித்து வெளியான பாகுபலி படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே இந்த பாகமதி படத்தையும் வெளியிடுகிறது. பாகமதி இசையை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
இந்த விழாவில் அனுஷ்கா பேசுகையில், இந்த பாகமதி படத்தில் நடிக்க டைரக்டர் அசோக், 2012-லேயே என்னை அணுகினார். ஆனால், நான் பாகுபலி படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்ததால் உடனடியாக இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இது ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் என்றார்.
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பேசுகையில், அனுஷ்காவின் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. அவர் நடித்த அருந்ததி படத்திற்கு நான் இசைக்கருவி வாசித்திருக்கிறேன். அதனால் இந்த பாகமதி படத்திற்கு இசையமைக்க சான்ஸ் கிடைத்தபோது ரொம்ப சந்தோசப்பட்டேன். அந்த வகையில், அனுஷ்கா படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்கிற எனது கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் எனது பெஸ்ட்டை கொடுத்துள்ளேன் என்கிறார் தமன்.