பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
பெங்களூருவைச் சேர்ந்தவர் மனீஷா யாதவ். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள பொட்டு படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாட்டுக்கு நடனம் ஆடினார். தற்போது திருமணமாகி செட்டிலாவிட்ட மனீஷா, தனக்கு முக்கிய கேரக்டர் என்று சொல்லி ஒரு பாட்டுக்கு ஆட வைத்து விட்டார் வெங்கட்பிரபு என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :
சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பனசுந்தரி பாடல் தான் கதையின் முக்கிய திருப்பம். பாடலை தொடர்ந்து சில காட்சிகளும் இருக்கும். அதுவும் முக்கியமானது என்றார். அதை நம்பித்தான் அந்த பாட்டுக்கு ஆடினேன், நடித்தேன். ஆனால் படம் வெளிவந்த பிறகுதான் அது வெறும் குத்துப்பாட்டு என்று தெரிந்தது. வெறும் கவர்ச்சிக்காகவே அந்த பாடல் சேர்க்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. குத்துப்பாட்டு என்று சொல்லியிருந்தால் ஆடியிருக்கவே மாட்டேன். பாட்டுக்கு பிறகு என்னை சொப்பன சுந்தரி என்று அழைக்கிறார்கள் அதுவும் பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.