‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினி 4வது நாளாக இன்று (டிச.,29) ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்.
முன்னதாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட ரசிகர்கள் இடையே பேசிய ரஜினி, கோவை எனக்கு முக்கியமான இடம். அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை.
கோவை விமான நிலையத்தில், அண்ணாமலை படம் ரிலீசான சமயத்தில் நடிகர் சிவாஜியுடன் வந்திருந்தேன். ரசிகர்கள் என்னை மட்டும் புகழ்வதை பார்த்த அவர், இது உன்னுடைய காலம் என்றார். சிவாஜி மிகப் பெரிய நடிகர் என்பதை தாண்டி நல்ல பண்பு உள்ளவர். எம்ஜிஆர் எல்லோர் மனதிலும் வாழ்வதற்கு அவரது நற்பண்பே காரணம். அவரது நல்ல குணத்தாலேயே அவரது புகழ் நிலைக்கிறது.
சமீபத்தில் கோவையில் ஒரு சாமியாரின் ஆசிரமத்திற்க சென்றிருந்தேன். அப்போது வேறு ஒரு பெரிய நடிகர் வருவதால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறி என்னை தாமதமாக வரச் சொன்னார்கள். இது அவருடைய காலம். சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் காலம் மிக முக்கியம். எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து தான் மக்கள் நம்மை மதிக்கிறார்கள். தக்க சமயம் வருபோது சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும். குடும்பம், தாய், தந்தை மிக முக்கியம் என்றார்.
முன்னதாக ரசிகர்களை சந்திக்க போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினியிடம், திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் பண்ண முடியாது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க ரஜினி மறுத்து விட்டார்.