‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வியடைந்ததால், தொடர்ந்து கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த கே.எஸ்.ரவிக்குமாரின் மார்க்கெட் டல்லடித்தது. அதையடுத்து கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய்சிம்ஹா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ஜனவரி 12-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த பத்து நாட்களாக துபாயில் நடைபெற்று வந்தது. பால கிருஷ்ணா-நயன்தாரா சம்பந்தப்பட்ட இரண்டு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்டதோடு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதோடு, இந்த படத்தையும் தனது பாணியிலேயே கமர்சியல் மசாலாவாக இயக்கியபோதும், அரசியல் விசயங்களையும் இணைத்து அதிரடி மசாலாப்படமாக இயக்கியிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.