மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வெங்கட் பிரபுவின் சென்னை-28 படத்தில் நடித்தவர்களில் க்ளிக்கானவர்கள் ஜெய்யும், மிர்ச்சி சிவாவும் தான். இந்த இருவரில் ஜெய்யுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். தற்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சென்னை-28 படத்தில் நடித்த நிதின் சத்யா, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து ஜெய் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்குகிறார்.
நிதின் சத்யாவின் 'ஷ்வேத் நிறுவனமு'ம், பத்ரி கஸ்தூரியின் 'ஷ்ரத்தா என்டர்டெயின்மென்டு'ம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு 'ஜருகண்டி' என்று வித்தியாசமாக டைட்டில் வைத்துள்ளார்கள். இது பிறமொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் பிரபலமான வார்த்தையாக இருப்பதால் இந்த தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
மற்ற படங்களில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கும் ஜெய், ''ஜருகண்டி' படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா நண்பர் என்பதால் குறைந்த சம்பளத்தில் நடித்து கொடுக்கிறார்.