‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் கமல்ஹாசன் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நாடு முழுக்க பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இன்னும் சிலர் அவரை கொல்ல வேண்டும் என்று கூட சொன்னார்கள். இந்நிலையில் அவர் எழுதி வரும் வார இதழ் தொடரில் இந்தவாரம் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,
மதம் குறித்து நான் பேசியதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடின தொனி இருப்பதாக ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும் தான் போதிக்கின்றன.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.