‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அக்டோபர் 6-7 தேதிகளில் நாகசைதன்யா - சமந்தா திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தேனிலவுக்கு சென்று வந்த அவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக, சமந்தா தான் நடித்து வந்த படங்களை மீண்டும் தொடருகிறார். மேலும், தனது மாமனார் நாகார்ஜூனாவுடன் இணைந்து ராஜூ ஹரி காதி-2 படத்தில் திருமணத்திற்கு முன்பு நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஒரு பேட்டியில் தனது மருமகளான சமந்தாவைப்பற்றி பெருமையாக கூறியிருக்கிறார் நாகார்ஜூனா. ஒரு சிறந்த நடிகை எனது மருமகளாக வந்து எங்கள் கலைக்குடும்பத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ராஜூ ஹரி காதி-2 படத்தில் அவருடன் நடித்த போது அவரது நடிப்பாற்றலை தெரிந்து கொண்டேன். அதோடு, சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருந்தார். முக்கியமாக, திருமணத்திற்கு முன்பு என்னை சார் என்று அழைப்பார். ஆனால் இப்போது பாபாய் என அழைக்கிறார் என்கிறார் நாகார்ஜூனா.