‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் படமான வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சாவேரி. அதையடுத்து சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்திலும் ஆஷ்னாவே நாயகியாக நடித்தார். இப்போது சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வர்சுந்தரம், சக்க போடு போடு ராஜா ஆகிய இரண்டு படங்களிலும் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும், கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் வைபவி சாண்டில்யா. இந்த படத்திற்கு வைபவியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, அவரது பர்பாமென்ஸ் குறித்து சந்தானத்திடம்தான் கருத்து கேட்டிருக்கிறார்கள்.
சந்தானமும், வைபவி நடிப்பு பற்றியும் அவரது திறமை குறித்தும் நல்லபடியாக எடுத்து சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் வைபவியை தைரியமாக ஒப்பந்தம் செய்தார்களாம்.