ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சுந்தர்.சி இயக்கிய ரெண்டு படத்திலேயே தமிழுக்கு வந்து விட்டார் அனுஷ்கா. என்றாலும், அருந்ததி படம்தான் அவருக்கு பெரிய ஓப்பனிங்கை கொடுத்தது. தெலுங்கில் உருவான அந்த படம் தமிழிப் டப் செய்யப்பட்டு தெலுங்கை விட அதிகப்படியாக வசூலித்தது. அதன்பிறகு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா, தெலுங்கைப் போலவே தமிழிலும் பேசப்படும் நடிகையானார்.
இந்த நிலையில், ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த அவர், அதன்பிறகு பாக்மதி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு பயமற்ற ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
மேலும், பாகுபலி-2வுக்குப்பிறகு அனுஷ்கா நடிக்கும் இந்த பாக்மதி படம் அவரது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் கதையம்சத்தில் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள். இந்த படத்தில் மலையாள நடிகர்களான ஜெயராம், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.