‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீ தயா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் அபயம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சேவை செய்து வருகிறார். தற்போது இந்த அறக்கட்டளையின் சார்பில் கேர் பார் சில்ட்ரன் என்ற புதிய அமைப்பை தொடங்கியிருக்கிறார்.
இந்த அமைப்பின் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது எல்லா ஊர்களிலும் அமைக்கபட இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுத்தல், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தல். கைவிடப்பட்ட தெருவோர சிறுவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பணிகளை செய்ய இருக்கிறார் லதா ரஜினிகாந்த். இது தொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த் பேசியதாவது:
தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம். தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம். இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.
சாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும். பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.
குழந்தைகள் இந்த உலகத்தில் பெரிய சொத்து. அவர்கள் கவலையால் அழுதால் இந்த உலகில் மழை பெய்யாது. பயிர் விளையாது. குழந்தைகள் மீது நமது கோப தாபங்களை திணிக்கிறோம். அவர்கள் தற்கொலை வரைக்கும் செல்கிறார்கள். தயவு செய்து குழந்தைகளை கொல்லாதீர்கள். அவர்களை வாழ அனுமதியுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டும். வில்லன்களாக மாறக்கூடாது. தினம் தினம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிளாட்பாரத்திற்கு வருகிறார்கள். அவர்களின் வருங்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. பாதுகாப்பற்றதாக இருக்கிறது.
தவறான எண்ணங்களால் அவர்கள் தவறான மனிதர்களாள வளர்கிறார்கள். சிட்டிசன் பிளாட்பார்ம் அமைப்பில் ஒவ்வொருவரும் இணைந்து இனி ஒரு குழந்தை கடத்தப்படக்கூடாது. இனி ஒரு குழந்தை பிளாட்பாரத்துக்கு வரக்கூடாது என்ற நிலையை உருவாக்குவோம். இந்த பணிகளை செய்ய உறுதுணையாக இருக்கும் என் கணவருக்கு நன்றி.
இவ்வாறு லதா ரஜினிகாந்த் பேசினார்.