ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பள்ளி பருவத்திலே. வெண்பா ஹீரோயின். கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் நாராயணன் இசை அமைத்துள்ளார், வினோத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வாசுதேவ் பாஸ்கர் இயக்கி உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பள்ளி காதல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
எனக்கும் பள்ளி பருவத்தில் காதல் வந்தது. அந்த காதல் சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பரமக்குடியில், காமன்கோட்டை கிராமத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் போது தேவதையாக தெரிந்த அவளுக்கு காதல் கடிதம் எழுதினேன். அவளும் எனக்கு காதல் கடிதம் தந்தாள். காதல் கனிரசம் சொட்ட எங்கள் காதல் வளரும் போது எனது காதலியை டிரில் மாஸ்டர் சைட் அடித்தார். நானும் எனது நண்பர்களும் டிரில் மாஸ்டரை உருட்டு கட்டையால் விரட்டி விரட்டி அடித்தோம். பிரச்சனை பெரிதாகி பஞ்சாயத்தாகி விட்டது.
பஞ்சாயத்து தீர்ப்பில் என்னையும், என் பெற்றோரையும் ஊரை விட்டு வெளியேற சொன்னார்கள். நான் துணிச்சலுடன் நான் காதலித்த பெண்ணை கூப்பிடுங்கள், அவள் காதலிக்கவில்லை என்றால் இரவே குடும்பத்தோடு காலி செய்து விடுகிறேன் என்றேன்.
பஞ்சாயத்துக்கு கூட்டி வரப்பட்ட அந்த பெண் என்னை யாரென்று தெரியாது என்று சொல்ல, எனக்கும் என் நண்பர்களுக்கும் பேரதிர்ச்சி. இப்படி பள்ளியில் படிக்கும்போது பெரும்பாலோர் காதலிப்பது உண்டு. அந்த காதலுக்காக எதையும் செய்யும் பலமும் துணிவும் அப்போது தான் வரும். இப்படி மாணவர்களின் யதார்த்த காதலை தான் வாசுதேவ் பாஸ்கரும் படமாக்கியிருக்கிறார். நிச்சயம் காதலிப்பவருக்கும், காதலிக்கப் போகிறவர்களுக்கும், பள்ளி பருவத்திலே படம் பிடிக்கும். என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.