‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எதையும் துணிச்சலாக எதிர்கொள்கிறவர் நடிகை பத்மப்ரியா. தன்னை கன்னத்தில் அறைந்த இயக்குனர் சாமியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தவர். திருமணம் செய்து கொண்டு செட்டினலானவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். கிராஸ்ரோடு என்ற மலையாளப் படத்திலும், சீஃப் என்ற இந்திப் படத்திலும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு பிரச்சினைகள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒரு சினிமாவில் முக்கிய கதாபாத்திரம் கிடைக்கவேண்டும் என்றால் படுக்கையை பங்கிட வேண்டும், அதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும். படுக்கைக்கும் தயாரில்லை என்றால் சினிமாவாய்ப்பில்லாமல் போகும்.
புதிய நடிகைகளுக்கு மட்டும்தான் பாலியல் பிரச்சினை என்று நினைக்காதீர்கள். பெயரும், புகழும் கொண்டவர்களுக்குத்தான் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அப்படி படுக்கையை பங்கிட்டவர், சினிமாவில் வெற்றியடைந்துவிடுவார் என்று உறுதியாக சொல்ல முடியுமா?
இதுபோன்ற விஷயங்களை நான் தவிர்த்ததால், ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால்தான் நான் நடிக்க ஒத்துக்கொள்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர் களுக்கு கிடைக்காது என்பதும் அவர் களுக்கு தெரியும். அதனால் என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்கள். இவ்வாறு பத்மப்ரியா கூறியுள்ளார்.