பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
லொள்ளு சபாவில் இருந்து சினிமாவுக்குள் வந்த பல நடிகர்களில் சாமிநாதனும் ஒருவர். பல படங்களில் காமெடியன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில், வேதாளம் படத்தைத் தொடர்ந்து தற்போது அஜீத்தின் விவேகம் படத்திலும் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் லொள்ளுசபா சாமிநாதன். இந்த படத்திற்காக பல்கேரியா சென்றிருந்தபோது, படப்பிடிப்பு நடைபெற்ற பில்டிங்கின் மாடியில் தான் ஒரு அறையில் இருவர் வீதம் அனைவரும் தங்கியிருந்தார்களாம். ஆனால், அதில் ஒரு அறையில் அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதாக சொல்லி அதில் தங்கியிருந்தவர்கள் வெளியேறி விட்டார்களாம்.
ஆனால் சாமிநாதன் தைரியமாக தங்கியிருந்தாராம். ஏற்கனவே தங்கியிருந்தவர்கள் சொன்னது போலவே, அமானுஷ்ய அறிகுறி தென்பட்டிருக்கிறது. என்றாலும், அதை கண்டு பயப்படாமல் அதே அறையில் 12 நாட்களாக தங்கியிருந்திருக்கிறாராம். மேலும் விவேகம் யூனிட் நபர்கள், ஒவ்வொரு நாளும் அவரிடம் இன்றைக்கு என்ன நடந்தது என்று அவரது திகில் அனுபவங்களை கேட்டுகொண்டேயிருந்தார்களாம்.