சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
வருத்தம், வேண்டுகோள், மன்னிப்பு, ஆகிய வார்த்தைகளுக்கு தனித்தனி அர்த்தம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களுக்குள் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையேதான் இந்த மோதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் இருவரது படங்களும் அடுத்தடுத்து வெளிவரும் போது அந்த மோதல்கள் தாறுமாறாகவும் இருக்கும். அப்படி ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 'விவேகம், மெர்சல்' ஆகிய படங்களின் செய்திகளும், வீடியோக்களும் அதற்கு ஒரு காரணம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் நடித்த 'சுறா' படத்தைப் பற்றி பெண் பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் கருத்து தெரிவிக்க அதைத் தொடர்ந்து அவரை விஜய் ரசிகர்கள் பலரும் தரக்குறைவாக விமர்சித்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து விஜய் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 'பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார் விஜய். ஆனால், அவரது ரசிகர்கள் செய்த செயலுக்காக அவருடைய அறிக்கையில் எந்த ஒரு வருத்தமோ, மன்னிப்போ அதில் இல்லை. பொதுவாக பெண்மையைப் போற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். டிவிட்டரில் நடந்த அந்தப் பிரச்சனை பற்றி சிறிதும் அவர் குறிப்பிடவில்லை.
அதே சமயம் நேற்று அஜித் சார்பாக அவருடைய சட்ட ஆலோசகர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சில நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், மற்றவர்களை சமூக வலைத்தளங்களில் அஜித்தின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். அது அஜித்திற்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது. இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் தன் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக அஜித் அவருடைய மனவருத்தத்தை சட்ட ஆலோசகர் மூலமாவது வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்போதாவது அஜித், விஜய் இருவரும் சமூக வலைத்தள சண்டைகள் பற்றி அவர்களது நிலையை வெளிப்படுத்தினார்களே என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான்.