ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சினிமாவுக்கு முற்றிலும் புதுமுகங்கள் 84 பேர் நடித்திருந்த 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தவர்கள் இரண்டு பேர்.. ஒருவர் அந்தப்படத்தில் லிச்சி கேரக்டரில் செம க்யூட்டாக நடித்த அன்னா ரேஷ்மா ராஜன்.. மற்றவர் அப்பாணி ரவி கேரக்டரில் டெரர் காட்டி அசத்திய சரத்குமார். படம் பற்றிய விமர்சனங்களில் எல்லாம் இவர்கள் இருவரின் நடிப்பை பற்றி பாராட்ட யாரும் தவறவில்லை.
அவர்களது நடிப்பும் இந்த பாராட்டுக்களும் சேர்ந்து இந்த இருவருக்கும் மோகன்லால் நடிப்பில் லால்ஜோஸ் டைரக்சனில் உருவாகியுள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தன. இந்தப்படத்தில் சரத்குமாரின் நடிப்பை பார்த்து வியந்த மோகன்லால், தான் அடுத்ததாக நடிக்க இருக்கும் 'ஒடியன்' படத்திலும் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை சரத்குமாருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.