ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா கபி. பாலிவுட்டிலிருந்து அவரை அழைத்து வந்தார் செல்வராகவன். மாலை நேரத்து மயக்கம் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹிந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வரும் வாமிகா. மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் படம் இறவாக்காலம். இந்தப் படம் மாயா போன்றே ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும். இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.