ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற கலைஞர்கள் எல்லாம் ஓவியாவை கார்னர் செய்யும் போது தனி ஆளாக அனைவரையும் சமாளித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஓவியா, ஓவியா ஆர்மி என்ற தனி படையே உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஓவியா - ஆரவ் இடையே காதல் விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இந்தவாரம் அவர் நீக்கப்படும் பட்டியலில் இருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்கு ஏகோபித்த அதரவு இருந்து வருகிறது.
இந்தச்சூழலில் ஓவியாவிற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக போலீஸாரும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு என்ன ஆனது என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது. சமூகவலைதளங்களில் மீண்டும் ஓவியா பற்றிய பேச்சாகவே இருக்கிறது.