ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமான நாளிலிருந்தே இந்த நிகழ்ச்சி 'ஸ்கிரிப்டட்' என்ற பேச்சு இருந்து வருகிறது. பலருக்கும் அது புரிந்திருந்தாலும் அதையும் மீறிய சில இயல்பான நிகழ்வுகள், சுவாரசியமான விஷயங்கள், சின்னச் சின்ன சண்டைகள் ரசிக்க வைத்தன. ஆனால், கடந்த சில நாட்களாக எதுவுமே இயல்பாக நடக்காமல் யாரோ எழுதிக் கொடுத்ததை, பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கதாபாத்திரங்களாக நடிக்க, பிக் பாஸ் இயக்குவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
இதுநாள் வரை ரசிகர்களை ரசிக்கவும், வியக்கவும் வைத்த ஓவியாவை சண்டைக்கரராகவும், சோம்பேறியாகவும் காட்ட முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. அதேசமயம் வாயைத் திறந்தாலே அடுத்தவர்களை ஏளனமாகத் திட்டும் காயத்ரியை மிகவும் நல்லவர், அன்பானவர், பொறுமையானவர் எனக் காட்டும் வேலைகளும் நடந்தது.
நேற்று இவற்றின் உச்சமாக ஜுலியை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து 'பிக் பாஸ்' ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டவர்களுக்கு சமையல் போட்டி ஒன்றை நடத்தி, அதற்கு ஜுலியை நடுவராக நியமித்தார்கள். அணி உறுப்பினர்கள் தேர்வு, வெற்றி பெற்ற அணி அறிவிப்பு, தோற்ற அணியினர் ஜுலிக்காக மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என அனைத்தும் நடுநிலை இல்லாமல் திட்டமிட்டபடி அரங்கேற்றிய நாடகமாக வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
தோற்ற அணியினரில் ஓவியா, ஜுலிக்கு கால் தரையில் படாமல் சிவப்பு ரத்தினக் கம்பளம் விரிக்க வேண்டும் என்றும், வையாபுரி, ஜுலிக்கு நிழலாக இருக்க வேண்டும் என்றும், சினேகன், ஜுலி கேட்பதை சமைத்துத் தர வேண்டும் என்றும், கணேஷ் வெங்கட்ராமன், ஜுலிக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் 'டாஸ்க்' கொடுத்தார்கள்.
ஒரு பெண்ணான ஜுலிக்கு, கணேஷ் வெங்கட்ராமன் 'மசாஜ்' செய்து விடலாம் என்று சொன்னதிலேயே 'பிக் பாஸ்' எந்த அளவிற்கு ஒரு மோசமான நாடகத்தைச் செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது அனைவருக்கும் புரிந்தது. அதன் பின் ஜுலிக்கும், ஓவியாவுக்கும் நடக்கும் சண்டை ரசிகர்களைக் கவரும் என்பதே காரணம். அதே சமயம் மற்றவர்கள் ஜுலிக்கு செய்த வேலைகளைக் காட்டவேயில்லை.
இப்படி ஓவியாவை மற்றவர்கள் வெறுப்பேற்றினால் ரசிகர்கள் நிகழ்ச்சியை அதிகம் பார்ப்பார்கள், பேசுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்படும் இப்படிப்பட்ட நாடகங்களுக்கு கமல்ஹாசன் இன்று நியாயாமான பதிலைச் சொல்வாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.