‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா தற்போது கலந்து கொண்டுள்ளார்.
சமந்தாவிற்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா ஆகியோரைத் தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சமந்தாவிற்கு வழக்கமாகத் தரப்படும் சம்பளத்தை விட அதிகமாகக் கொடுத்துள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படமான இந்தப் படத்தை ஆரம்பமான சில நாட்களிலேயே சன் டிவி பெரும் தொகை கொடுத்து சாட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டது.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்' படம் செப்டம்பர் மாதம் தசரா விடுமுறையில் வெளிவர உள்ளது.