மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் வாழ்க்கை வரலாற்று படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 1989-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ராணிகஞ்ச் என்ற இடத்தில் சுரங்கம் விபத்து ஏற்பட்டத்தில் 64 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்தனர். இவர்களை தனது புத்தி கூர்மையால் காப்பாற்றினார் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் கில். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ருஸ்டம் இயக்குநர் சுரேஷ் தேசாய் படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வந்த் சிங் கில் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். முன்னதாக இப்படத்தில் அக்ஷ்ய் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து அஜய் தேவ்கன் இப்படத்தில் நடிக்க உள்ளார். அதோடு அபினவ் சுக்லாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.