‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொள்வது சகஜமாகி விட்டது. முக்கியமாக விஜய்-அஜீத் ரசிகர்களுக்கிடையேதான் இந்த மோதல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அதற்கு தடை போட்டும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. அது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. சில சமயங்களில் எல்லை மீறியும் நடந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், ரசிகர்கள் இணையதளங்களில் மோதிக்கொள்வதை தொடர்ந்து கண்காணித்து வரும் சிம்பு, தற்போது தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இணையதளங்களில் ஒருவரையொருவர் தவறாக விமர்சிப்பது, திட்டிக்கொள்வது போன்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். அந்த நேரத்தை நல்ல விசயங்களுக்காக பயன்படுத்துங்கள் என்று வேண்டுகோளாக வைத்திருக்கிறார் சிம்பு.