‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'பாகுபலி' படத்தின் முதல் பாக வசூல் 700 கோடி, இரண்டாம் பாகத்தின் இதுவரை வசூல் 800 கோடி, ஆக மொத்தம் 1500 கோடி என்பது இந்தியத் திரையுலகத்தில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் படமாகிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் படத்தின் நாயகியான அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரமாதேவி' படமும் படமானது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களுக்குப் பின் 'ருத்ரமாதேவி' வெளியானது. ஆனால், பெரிய வரவேற்பு பெறாமல் படம் தோல்வியடைந்தது.
கடந்த 10 வருடங்களில் இந்தியத் திரையுலகில் சில சரித்திரப் படங்கள் வந்தாலும் 'பாகுபலி' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் அளவிற்கு இருந்ததில்லை என்றுதான் ரசிகர்களும் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மற்ற மொழிகளில் இன்னும் பல சரித்திரப் படங்களை உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன.
தமிழில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க சுந்தர்.சி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் 'சங்கமித்ரா' படம், மலையாளத்தில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள 'ரண்டமூழம்', ஹிந்தியில் 'பாகுபலி' கதையாசிரியர் விஜயேந்திரபிரசாத் கதை, திரைக்கதை எழுதி, 'வானம்' படத்தை இயக்கிய கிரிஷ் இயக்க, கங்கனா ரனவத் நடிக்கும் ஜான்சி ராணி கதையான 'மணிகர்னிகா' ஆகிய சரித்திரப் படங்கள் அடுத்த சில வருடங்களில் வெளிவர உள்ளன.
இந்தப் படங்களின் பட்ஜெட்டையும் 300 கோடி, 500 கோடி, 1000 கோடி என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படங்களைத் தொடர்ந்து மேலும் சில சரித்திரப் படங்கள் வரிசையாக வரலாம். ஆனாலும், அனைத்துமே 'பாகுபலி' சாதனையை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.