தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதத் துவக்கத்திலேயே ஆரம்பமாகியிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் அடிக்கும் வெயிலின் காரணமாக படப்பிடிப்பு நடத்துவது சிரமம் ஆக இருக்கும். எனவே, படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்கு தள்ளி வைத்துவிட்டார்களாம்.
படத்தின் கதை 70-களில் மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதைதான் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என முதலில் திட்டமிட்டிருக்கிறார்கள். இருந்தாலும், ரஜினிக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் ஸ்டுடியோ ஒன்றில் சில கோடிகள் செலவு செய்து மும்பையின் தாராவி பகுதியை அச்சு அசலாக உருவாக்கி வருகிறார்களாம்.
படத்தின் பெரும்பாலான பகுதிகள் அந்த அரங்கில்தான் நடைபெறும் என்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் ரஜினிகாந்த் தன் உதவியாளர்களுடன் அங்கேயே தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு வருகிறதாம். 2.0 படத்தின் ஸ்டுடியோ காட்சிகள் கூட அந்த அரங்கில்தான் படமாக்கப்பட்டன.
சென்னையில் பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்ட நிலையில் அந்த ஒரு ஸ்டுடியோவில் மட்டும்தான் சில தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மற்ற தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்திற்குச் சென்று விடுகிறது. ஒரு காலத்தில் தெலுங்குப் படங்கள் கூட சென்னையில்தான் படமாக்கப்பட்டன. ஆனால், இன்றோ தமிழ்ப் படங்கள் ஐதராபாத்திற்குச் சென்றுவிட்டன என திரைத்துறை ஊழியர்கள் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழக அரசும் அதைக் கவனித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் படமாக்கப்படாத படங்களுக்கு வரி விலக்குக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.