தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சில வருடங்களுக்கு முன்பு வரை கதாநாயகனாக நடித்து வந்த சரத்குமார், இளம் ஹீரோக்களின் வருகைக்குப் பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 'அடங்காதே' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இரண்டாவது ஆட்டம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சரத்குமாருக்குக் கிடைத்திருக்கிறது. அறிமுக இயக்குனர் பிருதிவி இயக்கத்தில் உருவாகும் 'இரண்டாவது ஆட்டம்' படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு போலீஸ் அதிகாரியாக லட்சுமி பிரியா நடிக்கிறார்.
'சுட்டகதை', 'கள்ளப்படம்', 'மாயா', 'களம்' உட்பட பல படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள லட்சுமி பிரியாவுக்கு இதுவரை சரியான பிரேக் அமையவில்லை. 'இரண்டாவது ஆட்டம்' படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமாருடன் பணியாற்றும் துடிப்பு மிக்க, அதிபுத்திசாலியான ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் லட்சுமி பிரியா. எனவே இந்தப் படம் தனக்கு பிரேக்காக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.