‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி 2 படத்திற்கு தடை கோரி மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் சரித்திர வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி இருக்கிறது. வருகிற ஏப்.,28-ம் தேதி, பாகுபலி-2 படம் உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கும் நிலையில், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்னை காரணமாக இப்படத்தை தடை செய்ய கோரி கடந்தவாரம் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டு சிக்கல் தீர்ந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், சவாலே சமாளி படத்திற்காக பாகுபலி பட வெளியீட்டாளர் ராஜராஜன் என்னிடம் ரூ.1.11 கோடி கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடனை திருப்பி செலுத்தவில்லை. ஆகவே எனக்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.1.48 கோடியை ராஜராஜன் செலுத்த உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் படவெளியீட்டின் அனைத்து உரிமையையும் முடக்கி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக ராஜராஜன் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டதோடு வழக்கையும், 4 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.