ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் மாபெரும் ஹிட்டுகளுக்கு சொந்தக்காரரான இயக்குனர் ஷாஜி கைலாஷ், தற்போது மீண்டும் மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரிக்காக காத்திருக்கிறார். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மலையாள சினிமாவில் தற்போது இறங்கு முகத்தில் இருக்கிறார் ஷாஜி கைலாஷ். ஆம்.. கடைசியாக மலையாளத்தில் அவர் இயக்கிய 'ஜிஞ்சர்' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அடுத்த படம் இயக்குகின்ற அறிகுறி எதையும் காணோம்.
தமிழில் கடந்த மூன்று வருடங்களாக அவரது இயக்கத்தில் தயாரான 'வைகை எக்ஸ்பிரஸ்' சமீபத்தில் வெளியாகி, பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்தாமல் வந்து சென்றுவிட்டது. இந்தநிலையில் தான் மோகன்லாலை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளது மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம்.. இந்த நிறுவனத்துக்கும் ஷாஜி கைலாஷுக்கும் உள்ள பந்தம் தான் இந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்க முக்கிய காரணம்.
மோகன்லால் 2000ல் அவரது நண்பர் ஆண்டனி பெரும்பாவூருடன் சேர்ந்து 'ஆசீர்வாத் சினிமாஸ்' என்கிற படக்கம்பெனியை துவங்கியபோது அந்த முதல் வாய்ப்பை, அதாவது தான் நடித்த 'நரசிம்ஹம்' படத்தை இயக்கும் வாய்ப்பை ஷாஜி கைலாஷுக்கே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல மோகன்லாலின் எவர்கிரீன் ரெக்கார்டுகளான 'ஆறாம் தம்புரான்', 'பாபா கல்யாணி' ஆகியவையும் ஷாஜி கைலாஷின் கைவண்ணத்தில் உருவானவை தான். அந்தவகையில் இந்த வாய்ப்பை ஷாஜி கைலாஷ் நன்கு பயன்படுத்திக்கொள்வார் என நம்பலாம்.