‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், நடிகர் ரஜினிகாந்த்தை நாளை ( மார்ச்-31) சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி படத்திற்கு பிறகு மலேசியாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான உறவு மேலோங்கி காணப்படுகிறது. கபாலி படத்தின் ஷூட்டிங் அங்கு நடந்தபோது மலேசிய அரசே, ஷூட்டிங் நடத்த விஷேச ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்தது. மேலும் அந்த கதையும் மலேசிய தமிழ் மக்களை தழுவி எடுக்கப்பட்டதால் படத்தின் அநேக படப்பிடிப்பு அங்கு நடந்தது.
இந்நிலையில் அரசு முறை பயணமாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மாவும் வந்துள்ளார். பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் நஜிப். தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தரும் நஜிப், தமிழக முதல்வர் மற்றும் கவர்னரை சந்திக்க உள்ளார். அதோடு நடிகர் ரஜினியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. மலேசியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் மலேசிய தமிழக மக்களை கவரும் பொருட்டு ரஜினியை அவர் சந்திக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் நஜினிகாந்தை நாளை ( மார்ச் 31) காலை 9.30 மணிக்கு மலேசிய பிரதமர் நஜிப் சந்திக்க உள்ளார்.