ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட நடிகை ரம்பாவுக்கு கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை, 2010ல், ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
தன்னுடன் சேர்ந்து வாழ, கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை, குடும்ப நல நீதிமன்றத்தில், 2016 அக்டோபரில், ரம்பா மனு தாக்கல் செய்தார். மேலும், மகள்களின் படிப்பு, மருத்துவ செலவுகளுக்கு, மாதம், 2.50 லட்சம் ரூபாய், இடைக்காலமாக வழங்கவும் கோரியிருந்தார். இதற்கிடையே, நடிகை ரம்பா சென்னை ஐகோர்ட்டில் தன் கணவரை கண்டுபிடித்து தரும்படி மற்றொரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பா, தன்னுடைய குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இதேப்போல் இந்திரகுமாரும் ஆஜரானார்.
இதையடுத்து நீதிபதிகள், 'இது குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கு என்பதால், நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி, இருவரும் தங்களுக்குள் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.