ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் எப்படி நெறி கட்டும் என ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு.. அது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் விஷயத்தில் உண்மை என்பது போலத்தான் ஆகிவிட்டது.. விஷயம் இதுதான், கடந்த வருடம் மோகன்லால் தனது ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ஒப்பம்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.. கண்பார்வையற்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார் மோகன்லால்.. நிச்சயம் இந்தப்படத்திற்கோ அல்லது படத்தில் நடித்த மோகன்லாலுக்கோ தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக திரையுலகினரும் விமர்சகர்களும் பேசிக்கொண்டார்கள்..
இந்தநிலையில்தான் இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது தேசிய விருதுகளுக்கான நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார்.. தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருப்பவரின் படத்தை, தேசிய விருதுகளுக்காக அனுப்ப முடியாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்கு ஒப்பம் திரைப்படத்தை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. மோகன்லால் நடித்த இன்னொரு படமான 'புலி முருகன்' மாஸ் படம் என்பதால் அந்தப்படத்தில் மோகன்லாலுக்கு தேசியவிருது கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்றே சொல்லப்படுகிறது.