'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை |
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பெருகி வரும் இந்த நேரத்தில் அதற்கு எதிரான கருத்துருவாக்கமும் நடந்து வருகிறது. சமூகத்தின் பல்வேறு மட்டத்திலிருந்தும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
ஜோதிகா நடிப்பில் குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் ஊர்வசி. நாளை 8ந் தேதி மகளிர் தினம். இதையொட்டி ஊர்வசி அளித்துள்ள பேட்டியில் பாலியில் குற்றங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:
பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதை பார்க்கும்போது வாழ்வதற்கே அச்சமாக இருக்கிறது. பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்கள் அதுதான் இதற்கு காரணம் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். இது பெண்ணுக்கு தீங்கு செய்துவிட்டு அவள் மீது குற்றம் சொல்கிற போக்கு.
3 வயது குழந்தையை தூக்கி கொண்டு போய் பலாத்காரம் செய்கிறான். அந்த குழந்தை என்ன ஆபாச உடை அணிந்திருந்தது என்று சொல்லுங்கள். 80 வயது மூதாட்டி என்ன ஆபாச உடை அணிந்து செல்கிறாள் சொல்லுங்கள். ஆண்களின் வக்கிரம் அதிகமாகிவிட்டது என்பதை தவிர வேறு காரணமல்ல.
அனைத்துக்கும் காரணம் செல்போன்தான். இன்றைக்குள்ள விஞ்ஞான வசதியை பயன்படுத்தி ஒவ்வொருவன் கைக்குள்ளும் ஆபாச படங்கள் இருக்கிறது. முன்பு மறைந்து பார்த்த படங்களை இப்போது கையில் வைத்துக் கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கிறான். அப்படி பார்க்கும்போது அவனுக்குள் உடல் பசி உருவாகிறது. அந்த பசியை தணித்துக் கொள்ள அவர் குழந்தை என்றும் பார்ப்பதில்லை, முதியவள் என்றும் பார்ப்பதில்லை.
சட்டசபைக்குள் இருந்து கொண்டு எம்.எல்.ஏக்கள் ஆபாச படம் பார்க்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இணையதளங்களில் ஆபாச படங்களை தடுக்க வேண்டும். அது சாத்தியில்லை என்றால் பாலியல் குற்றவாளிகளுக்கு மற்றவர்கள் பயப்படுகிற மாதிரி தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஊர்வசி கூறினார்.