ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை பாவனா, சில தினங்களுக்கு முன்னர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவம் அடங்குவதற்குள் நடிகை வரலட்சுமி சரத்குமார், நானும் பாலியல் தொல்லை அனுபவதித்தேன் என கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகை வரலட்சுமி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
இதை சொல்லலாமா... வேண்டாமா... என்று தெரியாமல் இரண்டு நாட்களுக்கு பிறகு இதை தெரிவிக்கிறேன். முன்னணி டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தலைவரை சந்தித்தேன். அரை மணிநேர சந்திப்பிற்கு பிறகு அவர், அடுத்து எப்போது வெளியே சந்திக்கலாம் என்றார். ஏதுவும் வேலை விஷயமா என்றேன், அதற்கு அவர் சரித்தப்படியே இல்ல இது வேற என்றார். நான் சற்று அதிர்ச்சியுடன் கிளம்புபடி கூறினேன், அவ்வளவு தானா... என்று மறுபடியும் சிரித்தபடியே சென்றார்.
சினிமா என்றாலே இப்படித்தான் இருக்கும், நடிக்க வரும்போதே இதை தெரிந்து கொள்ள வேண்டாமா...? இப்போது புகார் செய்து என்ன என்பார்கள். பெண்களை அவமதிக்கவோ, அல்லது வெறும் உடம்பை காட்டவோ இந்த துறைக்கு வரவில்லை. எனக்கு நடிப்பு என்றால் பிடிக்கும், அது நான் தேர்வு செய்த வேலை. திரையில் கிளாமராக வருவதால் நேரில் மரியாதையில்லாமல் பேசுவது சரி அல்ல. இது என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம். என்னிடம் தவறாக நடந்தவர் யார் என்று கேட்டால் அதை தெரிவிக்க இது உகந்த இடமோ, நேரமோ இல்லை என்பேன். மேலும் அதை தெரிவித்தால் பிரச்சனை திசை திரும்பிவிடும்.
பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன மாதிரி உடையணிய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று கூறுவதை விட்டுவிட்டு, பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
சினிமா துறை மட்டுமல்லாது எல்லா துறையிலும் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள், பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயத்தால் பேசாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்காகவும் நான் இங்கு பேசுகிறேன்.
இப்போது நான் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களின் பாதுகாப்பு என்ற விஷயமே கனவாகிவிடும். அதன்பின் பலாத்காரம் என்ற வார்த்தையை இந்த சமூகத்தில் இருந்து நீக்க முடியாது. நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிற சகோதரிகளும், நண்பர்களும் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தனியாக இல்லை.
இவ்வாறு வரலட்சுமி கூறியுள்ளார்.