பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம்வாரியர் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜோக்கர் படம் தயாரிக்கப்பட்டது. இதுதவிர, நயன்தாரா நடிப்பில் 'மாயா' எனும் வெற்றிப் படத்தை தயாரித்த 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனமும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு சொந்தமானது தான்.
'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக 'மாநகரம்' என்ற படம் உருவாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 'ஹைபர் லிங்க்' எனும் புதிய திரைக்கதை யுக்தியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் சில தினங்களுக்குமுன் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'மாயா' படத்திற்கும் யு/ஏ சான்றிதழ்தான் கிடைத்தது. 'யு/ஏ' சான்றிதழ் பெற்றதால் மாநகரம் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்றாலும், திட்டமிட்டபடி இப்படத்தை மார்ச் 10ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம்.