குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். தற்போது நாங்களெல்லாம் வேலைக்கு போயிட்டா ஊரை யாரு பாத்துக்கிறது உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். மதுரைக்காரரான இவர், ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, மதுரையில் நடந்த போராட்டங்களில் தானும் கலந்து கொண்டு போராடினார். அதன்காரணமாக 5 முறை அவர் போலீசாரால் தாக்கப்பட்டிருக்கிறார்.
அதன் காரணமாக, 3 முறை மாறி மாறி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் அபி சரவணன். கடந்தசில தினங்களுக்கு முன்புதான் உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். அப் போது அவரை நடிகர் விஜயசேதுபதி கட்டித்தழுவி வரவேற்றுள்ளார். மேலும், தற்போது உடல்நலம் தேறி விட்ட அபிசரவணன், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்ப மாட்டேன் என்று ஏற்கனவே முடி வெடுத்திருந்தேன். அதன்படி மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கலந்து கொள்ள சென்னைக்கு வருவேன் என்கிறார்.