ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமா நடிகைகளில் அதிகம் கிசுகிசுக்களில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளானவர்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஆளாக காவ்யா மாதவன் தான் இருப்பார். அந்த அளவுக்கு ரவுண்டு கட்டி சோஷியல் மீடியாவிலும் சில இணையதளங்களிலும் பலர் இஷ்டத்துக்கு எழுதி தள்ளினர். குறிப்பாக திலீப்புக்கும் அவருக்குமான நட்பு, திலீப்-மஞ்சு வாரியர் விவாகரத்துக்கு காரணம் என இவரை இணைத்தே பலரும் எழுத சீறியும் பார்த்தார், கெஞ்சியும் பார்த்தார் காவ்யா மாதவன். ஆனாலும் நிலைமை சீராகவில்லை.
சரி, திலீப்பைத்தான் திருமணம் செய்துகொண்டோமே இனியாவது இந்த ரணகளங்களுக்கு ஒரு முடிவு கட்டப்படும் என்று நினைத்தால் சமீபத்தில் காவ்யா மாதவன் ஆன்லைனில் நடத்திருவம் பிசினஸின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் நுழைந்து அவரைப்பற்றி தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்கள் சில விஷமிகள்.. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த காவ்யா மாதவன், இதுகுறித்து எர்ணாகுளம் ஐ.ஜியை சந்தித்து புகார் கொடுத்துள்ளார் காவ்யா மாதவன். தற்போது இதுகுறித்த தீவிர விசாரணையில் சைபர் க்ரைம் போலீசார் இறங்கியுள்ளார்கள். இதில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு கடும் தண்டனை வாங்கித்தரும் வரை ஓயமாட்டேன் என சபதமே எடுத்துள்ளாராம் காவ்யா மாதவன்.