ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தமிழ்ப்படங்களில் அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் பா.விஜய். அதோடு ஆட்டோகிராப் என்ற படத்தில், ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ் வென்றால் போராடும் போர்க்களமே -என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்றார். பின்னர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய இளைஞன் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன்பிறகும் சில படங்களில் நடித்தவருக்கு எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர் முயற்சி காரணமாக பின்னர் நையப் புடை, ஸ்ட்ராபெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஸ்ட்ராபெர்ரி ஓரளவு வெற்றி பெற்றது.
அதையடுத்து தற்போது ஒரு கிரைம் திரில்லர் கதையில் நடித்துக்கொண்டிருக்கிறார் பா.விஜய். இந்த படத்திற்கு ஆருத்ரா என்ற பெயர் வைத்துள்ளனர். முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பா.விஜய், சண்டை காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம். மேலும், இதற்கு முன்பு அவர் நடித்துள்ள ஸ்ட்ராபெர்ரி படம் போன்று ஒரு சமூக களையெடுக்கும் கதையில் இந்த படம் தயாராகிறதாம்.