Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திரைப்பட விழாவில் கலாபவன் மணியின் குடும்பத்தினருக்கு அவமதிப்பா..?

15 டிச, 2016 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Is-Kalabhavanmani-family-disregard

இந்திய சர்வதேச திரைப்பட விழா, கேரளாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இதன் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். வழக்கம்போலவே நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்த வருடம் மறைந்த கலாபவன் மணி, கல்பனா, கவளம் நாராயண பணிக்கர், ஜிஷ்ணு ராகவன் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கலாபவன் மணியின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கூட அழைப்பு அனுப்பப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன். குறைந்தபட்சம் கலாபவன் மணியின் மனைவியையாவது அழைத்திருக்கலாம் என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.


இதன்மூலம் விழா ஏற்பாட்டாளர்கள் கலாபவன் மணியினரின் குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டார்கள் எனவும் குமுறுகிறார் ராமகிருஷ்ணன். ஆனால் இந்த திரைப்பட விழாவை முன்னின்று நடத்தி வரும் இதன் தலைவரான டைரக்டர் கமல், இந்த குற்றச்சாட்டில் எந்தவித நியாயமும் இல்லை என மறுத்துள்ளார்.. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை என்றும், குறிப்பாக மறைந்த பிரபலங்களின் குடும்பத்தினருக்கும் கூட தாங்கள் அழைப்பு அனுப்பவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


ஆனால் கல்பனாவின் சகோதரி ஊர்வசி, ஜிஷ்ணு ராகவனின் தந்தை ராகவன் ஆகியோர் இதில் கலந்துகொண்டதுகூட இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பதால் தான்.. அதுகூட அவர்களுக்கு போன் மூலமாகவே தகவல் சொல்லப்பட்டது என்றும் கூறியுள்ளார் கமல். கல்பனாவின் மகள் இதில் கலந்துகொண்டது கூட ஊர்வசி அவரை வற்புறுத்தி அழைத்து வந்ததால் தான் என்றும் விளக்கம் அளித்துள்ள கமல், தங்களுக்கு யாரையும் அவமானப்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in