ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
யூனிசெப் எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதராக, ஹிந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகை, பிரியங்கா சோப்ரா, 34; தற்போது, ஹாலிவுட் படங்களிலும் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில், உலகம் முழுவதும் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும், யூனிசெப் எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியம், பிரியங்கா சோப்ராவை, சர்வதேச நல்லெண்ண துாதராக நியமித்துள்ளது. இந்த அமைப்பின், 70ம் ஆண்டு துவக்க விழா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது குறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது: குழந்தைகளின் சுதந்திரத்திற்காக, யூனிசெப் சிறப்பான பணிகளை செய்து வருகிறது; 10 ஆண்டுகளாக, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஐ.நா., நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவும், நல்வாழ்வு வழங்கவும் பணியாற்றுவேன். குழந்தைகளுக்காக, மனிதநேயத்துடன் பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஓர்லாண்டோ புளூம், ஜாக்கிசான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.