பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என, பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், 31, வேதனையுடன் குறிப்பிட்டார். வித்யா பாலன், அலியா பட், ராதிகா ஆப்தே, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் ஆகிய முன்னணி நடிகையர், பாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்ததை பாராட்டும் வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர் பேசியதாவது: பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் பிறரின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் கொடுமை, சிறுமியாக இருந்தபோது எனக்கும் நடந்தது. அதனால் ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த சம்பவம் நீண்டகாலம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் பேசினார்.பிரபல நடிகை கல்கி கோச்சலின், இரண்டாண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, திரைப்பட வாய்ப்புக்காக மற்றும் சிறு வயதில் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து, பல்வேறு நடிகையரும் தெரிவித்து வருகின்றனர்.