ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த நடிகர் முரளியின் வாரிசு அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, பாலாவின் பரதேசி படத்தின் மூலம் பேசப்படும் நடிகரானார். தற்போது அவர் கைவசம் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் உள்ளன. அடுத்தப்படியாக அதர்வா, புதியவர் பர்னேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இவர் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
கல்லூரி மாணவர்களின் பின்னணியில் உருவாக உள்ள இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா, கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஏற்கனவே இரும்புக்குதிரை, ஈட்டி படங்களுக்காக உடலை சிக்ஸ்பேக்காக மாற்றி வைத்திருக்கும் அதர்வா, இந்த கல்லூரி மாணவர் வேடத்திற்காக தனது உடல் எடையை இன்னும் குறைத்துள்ளார்.
2003-2005 காலக்கட்டத்தில் கதை நகருவது போன்று படம் உருவாக்கப்பட இருக்கிறது. அதர்வாவுடன் ‛அஞ்சாதே' நரேன், பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் ஆகியோரும் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளனர். நரேன், அதர்வாவின் மாமாவாகவும், தியாகராஜன் லோக்கல் தாதாவாகவும் நடிக்க உள்ளார்கள். இம்மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. சேலம், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.