ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மறைந்த நடிகர் முரளியின் வாரிசு அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, பாலாவின் பரதேசி படத்தின் மூலம் பேசப்படும் நடிகரானார். தற்போது அவர் கைவசம் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் உள்ளன. அடுத்தப்படியாக அதர்வா, புதியவர் பர்னேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இவர் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
கல்லூரி மாணவர்களின் பின்னணியில் உருவாக உள்ள இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா, கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஏற்கனவே இரும்புக்குதிரை, ஈட்டி படங்களுக்காக உடலை சிக்ஸ்பேக்காக மாற்றி வைத்திருக்கும் அதர்வா, இந்த கல்லூரி மாணவர் வேடத்திற்காக தனது உடல் எடையை இன்னும் குறைத்துள்ளார்.
2003-2005 காலக்கட்டத்தில் கதை நகருவது போன்று படம் உருவாக்கப்பட இருக்கிறது. அதர்வாவுடன் ‛அஞ்சாதே' நரேன், பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் ஆகியோரும் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளனர். நரேன், அதர்வாவின் மாமாவாகவும், தியாகராஜன் லோக்கல் தாதாவாகவும் நடிக்க உள்ளார்கள். இம்மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. சேலம், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.