ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
பிங்க் படத்தை தொடர்ந்து டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛நாம் சபானா'. சிவம் நாயர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் டாப்சி, முதன்மை ரோலில் நடிக்கிறார். ஆக்ஷ்ய் குமார் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் பேபி படத்தின் முந்தைய பாகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை டாப்சி மறுத்துள்ளார். சமீபத்தில் இப்படம் பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛பேபி படத்திலிருந்து எனது கேரக்டர் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சபானா படம் பேபி படத்தின் முந்தைய பாகமோ, அல்லது அதன் தொடர்ச்சியோ கிடையாது. இது ஒரு வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த கதை'' என்று கூறியுள்ளார். தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நாம் சபானா படம், அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி ரிலீஸாக உள்ளது.